மாற்றுத்திறனாளி மாணவர்களுக்கு சீருடை வழங்கல் – அகில இந்திய யாதவ சபையின் தேசிய செயலாளர் வழங்கினார்
உலக மாற்றுத்திறனாளிகள் வார விழாவை முன்னிட்டு இளம் சிறார்களுக்கான ஆரம்ப நிலை பயிற்சி மையத்தில் மாணவர்களுக்கு சீருடை வழங்கும் விழா நடைபெற்றது. இதில் இப்பள்ளியின் ஒருங்கிணைந்த கல்வி மேம்பாட்டு குழு செயலாளர் முருகானந்தம் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக அகில இந்திய யாதவ மகாசபையின் தேசிய செயலாளர் பொறியாளர் பாஸ்கர் யாதவ் கலந்து கொண்டு இளம் சிறார்களுக்கு தனது சொந்த செலவில் சீருடை வழங்கினார். ஆரம்ப நிலை பயிற்சி மைய ஆசிரியர்கள் ஜெசிந்தா, தேவநாதன், ராஜலட்சுமி, பிரியா, பிரமிளா, பாக்கியம், தேவநாதன் கலந்து கொண்டனர் மற்றும் யாதவ மகாசபையின் மாவட்ட தலைவர் சுரேஷ், மாவட்ட பொருளாளர் நாராயணமூர்த்தி யாதவ மகாசபை நிர்வாகிகள் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.



